search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரவலாக மழை"

    • வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
    • இதையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன மழை

    அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்தது. தொடர்ந்து நேற்றிரவும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக மேட்டூரில் நேற்று பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வி வசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 9.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்ததுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    வானிலை எச்சரிக்கை

    இதற்கிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 6-ந் தேதியான இன்றும், நாளையும் (7-ந் தேதியும்) இடி, மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் 700 கனஅடியில் இருந்து அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மழை சற்று ஓய்ந்திருந்தநிலையில் நேற்று மீண்டும் பெய்ய தொடங்கி யது.

    இதனால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1101 கனஅடியாக உயர்ந்தது. நேற்று வரை அணையிலி ருந்து தமிழக பகுதிக்கு 700 கனஅடிநீர் திறக்கப்பட்டது. தற்போது கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியாக குறைக்கப்பட்டது.

    அணையின் நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது. வைகை அணையின்நீர்ம ட்டம் 64.60 அடியாக உள்ளது. 769 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்து ப்பாறை அணையின் நீர்மட்டம் 126.54 அடியாக உள்ளது. வருகிற 106 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7, தேக்கடி 9.2, கூடலூர் 16.2, உத்தம பாளையம் 16.6, சண்முகாநதி அணை 18.4, போடி 11.8, வைகைஅணை 3.8, மஞ்சளாறு 2, சோத்து ப்பாறை 2, பெரியகுளம் 1, வீரபாண்டி 5, ஆண்டிபட்டி 3.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • குமரி மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
    • அணையிலிருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    நாகர்கோவில் :

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் குமரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குமரி கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கும், சில நேரங்களில் 65 கிலோ மீட்டர் வேகத்திற்கும் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் இன்று காலையிலும் பரவலாக சாரல் மழை

    நாகர்கோவிலில் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. தக்கலை, திருவட்டார், குலசேகரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குழித்துறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.87 அடியாக உள்ளது. அணைக்கு 614 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட கன்னி பூ அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் கும்பபூ சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர்.

    சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் நாற்று பாவும் பணி நடைபெற்று வருகிறது. பருவமழையையும் பாசன குளத்தில் உள்ள தண்ணீரை யும் நம்பி விவசாயி கள் சாகுபடி பணியை தொடங்கி யுள்ளனர்.

    • கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெறித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.
    • தற்போது பெய்து வரும் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தின்றி காணப்பட்டது.

    மேலும் வராகநதி, கொட்டக்குடி, மூலவைக யைாறு உள்ளிட்ட ஆறுகள் வறண்டு காணப்பட்டது. கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெறித்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. வருசநாடு அருேக உள்ள சின்ன சுருளி அருவிக்கு மேகமலையில் மழை பெய்யும் போது தண்ணீர் வரத்து இருக்கும். தற்போது பெய்து வரும் மழையால் நீண்ட நாட்களுக்கு பிறகு வறண்டு கிடந்த சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு ள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மூலவைகையாற்றுக்கு நீர்வரத்து இல்லை. மழை தொடரும் பட்சத்தில் தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.10 அடியாக உள்ளது. 199 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 47.41 அடியாக உள்ளது. 30 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்து திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 69.20 அடியாக உள்ளது. ஒரு கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 3.6, கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 2, போடி 1.8, வைகை அணை 8.2, மஞ்சளாறு 12, சோத்துப்பாறை 17, வீரபாண்டி 13.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பெருஞ்சாணியில் 15.8 மில்லி மீட்டர் மழை பதிவு
    • 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்படுகிறது. பாசன குளங்களிலும் போது மான அளவு தண்ணீர் இல்லை. இருப்பினும் விவ சாயிகள் பருவமழையை நம்பி சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் மழை கண்ணாமூச்சி காட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் நாகர்கோ வில் பகுதியில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமாக காணப் பட்டது. பின்னர் திடீரென மழை பெய்தது. ½ மணி நேரமாக மழை தூறியது.

    இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. பள்ளி சென்ற மாணவிகள் குடைபிடித்த வாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குல சேகரம், தக்கலை, ஆரல் வாய்மொழி, மார்த்தாண்டம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது.

    திற்பரப்பு அருவியிலும் மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. பெருஞ்சாணியில் அதிகபட்ச மாக 15.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    அணைகளுக்கு வரக்கூ டிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.69 அடியாக இருந்தது. அணைக்கு 366 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 689 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி நீர்மட்டம் 22.95 அடியாக உள்ளது. அணைக்கு 193 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட் டம் தொடர்ந்து மைனஸ் அடியில் இருந்து வருகிறது.

    இதையடுத்து 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் பிரச்சினை சமா ளிக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் புத்தன் அணையில் இருந்து கொண்டுவரப்பட்ட தண் ணீரை பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 15.4, களியல் 14.5, திற்பரப்பு 12.8, பாலமோர் 12.2, கோழி போர்விளை 8.2, பூதப்பாண்டி 7.4, குழித்துறை 6.2, குருந்தன்கோடு 4.8, நாகர் கோவில் 4.2, அடையாமடை 4.2, மயிலாடி 2.6, பேச்சிப்பாறை 2.4, ஆணைக் கிடங்கு 2.1, கொட்டாரம் 1.2.

    • லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
    • மழை காரணமாக மாவட்ட முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு, விவசாய பணிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.

    கடலூர்:

    தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, நேற்று முதல் வருகிற 29- ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதோடு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆகையால் நேற்று முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவ துறை அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையிலும், இடையில் 100 டிகிரி சுட்டெரிக்கும் வெயி லும் பதிவானது. இதன் காரணமாக சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட கார ணத்தினால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் ஏராளமான பொது மக்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மாவட்டத் தில் வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டு வந்த நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம் ,சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீ முஷ்ணம், காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை, சேத்தியாதோப்பு, புவனகிரி, வடலூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவ லாக மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த மழை காரணமாக மாவட்ட முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு, விவசாய பணிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. தற்போது கடலூர் மாவட் டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே குளங்களில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவி மில்லி மீட்டரில் வருமாறு:- காட்டுமன்னார்கோவில் - 22.4, பெல்லாந்துறை - 22.2, வேப்பூர் - 22.0, லால்பேட்டை - 22.0,லக்கூர் - 13.4, ஸ்ரீமுஷ்ணம் - 11.3, கீழ்செருவாய் - 11.0, பரங்கிப்பேட்டை - 10.2, தொழுதூர் - 8.0, கலெக்டர் அலுவலகம்-6.2, சேத்தியா தோப்பு - 6.2, புவனகிரி - 6.0, குறிஞ்சிப்பாடி - 4.0, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 3.75, பண்ருட்டி - 3.0, சிதம்பரம்-2.2, அண்ணா மலைநகர் - 2.2, விருத்தா சலம் - 2.0,கடலூர் - 2.0, வானமாதேவி-1.2, கொத்தவாச்சேரி - 1.0 கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 182.25 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    அந்தியூர்:

    அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள விளைநிலங்களில் ராகி, மக்காச்சோளம், கம்பு, பச்சைப்பயிறு, தட்டப்பயிர் உள்ளிட்ட பயிர்களையும், பருவ நிலைக்கு ஏற்ப மற்ற வகை பயிர்களையும் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றார்கள்.

    இந்த நிலையில் ஒரு சில இடங்களில் மழையை நம்பியே விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து வந்தது.

    மேலும் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் அந்த மழையினால் மலைப்பகுதி குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளித்து வந்தது.

    இதனைத்தொடர்ந்து நேற்று மாலை ஒரு மணி நேரம் பரவலாக மழை பொழிந்து விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
    • இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் பல பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக எடப்பாடி, சங்ககிரி, கரிய கோவில், கெங்கவல்லி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக எடப்பாடியில் 22 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    சங்ககிரி- 21, கரியக்கோவில்-12, கொங்கவல்லி -10, தம்மம்பட்டி-6, பெத்தநாயக்கன்பாளையம் -7, சேலம் -3, ஆத்தூர் -2.4, ஏற்காடு -1.6 என மாவட்டம் முழுவதும் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சேலம் மாநகரில் பல்வேறு சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 35 மில்லிமீட்டர் வரை மழை பதிவானது.

    சேலத்தில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- சங்ககிரி - 22.3, காடயாம்பட்டி - 18, தம்மம்பட்டி - 14, ஏற்காடு - 8.4, எடப்பாடி - 3.2, ஆணைமடுவு - 3, சேலம் - 2.9 என மொத்தம் 106.80 மில்லிமீட்டர் மழை பதிவானது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து, பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியது.
    • இந்த நிலையில், சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    சேலம்:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்து, பனிப்பொழிவு அதிகரிக்க தொடங்கியது.

    இந்த நிலையில், சேலத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3 மணியளவில் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து மாவட்டத்தில் ஏற்காடு, ஆத்தூர், ஓமலுார், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், தலைவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம் மாநகரத்தில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், அழகாபுரம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கிச்சிப்பாளையம், அன்ன

    தானப்பட்டி, கொண்ட லாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. அஸ்தம்பட்டி, காந்திரோடு பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் அங்கு மின்சாரம் தடைபட்டது. பின்னர் அதை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காட்டில்...

    கிறிஸ்துமஸ் பண்டி கையை ஒட்டி, ஏற்காட்டிற்கு நேற்று முன்தினம் இரவே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து, அங்குள்ள விடுதிகளில் தங்கினர். காலையில் ஏற்காட்டை சுற்றி பார்க்க காத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று காலை முதல் ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டம் நிலவியது. 5 அடி தூரத்தில் உள்ளவர் கூட தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர்.

    மாலை 3 மணிக்கு மேல் திடீரென மழை பெய்ய தொடங்கியது. மாலை முதல் இரவு 8 வரை தொடர்ந்து மழை பெய்தது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் நனைந்தபடியும், குடைபிடித்த படியும் அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ட்ஸ் சீட் பகுதிகளை பார்த்து ரசித்தனர். பலர், படகு இல்லத்தில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 29.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    மழையளவு

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-ஏற்காடு - 29.6, தலை வாசல் - 14, பெத்தநா யக்கன்பாளையம்-10, ஆனைமடுவு - 10, சேலம்-9.6, ஓமலூர்- 9, எடப்பாடி-9, கரிய கோவில் - 9, வீரகனூர் - 8, ஆத்தூர் - 7.2 தம்மம்பட்டி-6, சங்ககிரி - 5.3, கெங்கவல்லி - 4, காடையாம்பட்டி - 4, மேட்டூர் - 3.4 என மாவட்டம் முழுவதும் 138.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் நனைந்தபடி சென்றனர்
    • மாலை 3 மணிக்கு விடுமுறை அறிவிப்பு

    வேலூர்:

    மாண்டஸ் புயலை தொடர்ந்து ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு ஆகிய வட்டா ரங்களில் கனமழை பெய்தது. இதனால் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.இது குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் நனைந்தபடி சென்றனர். வேலூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 3 மணிக்கு பள்ளிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விடுமுறை அறிவித்தார்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

    தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து மேலும் அதிக ரித்துள்ளது. பாலாற்றில் இருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகள் உள்ளன. இதில் நேற்று வரை 194 ஏரிகள் நிரம்பியது. ஒரே நாளில் மேலும் 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மாவட்டத்தில் 204 ஏரிகள் நிரம்பி கோடிப் போகிறது. 56 ஏரிகள் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்ற ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக சேலம், ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி, தலைவாசல், வீரகனூர், கரிய கோவில், எடப்பாடி, ஓமலூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    62.60 மி.மீ மழை பதிவு

    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைவாசலில் அதிகபட்சமாக 16 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தலைவாசல் - 16 மி.மீ, வீரகனூர் - 9, சங்ககிரி - 7.4, தம்மம்பட்டி - 6, ஏற்காடு - 5, கரியகோவில் - 4, பெத்தநாயக்கன் பாளையம் - 3, ஆத்தூர்-2.4, கெங்கவல்லி- 2.2, ஓமலூர்- 2, எடப்பாடி- 2, ஆணைமடுவு - 2 சேலம்-1.6 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 62.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல்

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, காக்காவேரி உள்பட பல பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் திடீரென மழை பெய்தது. மதியம் 3 மணிக்கு தொடங்கிய மழை, மாலை 5 மணி வரை பெய்து கொண்டிருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று அதிகாலையும் நாமக்கல் நகரில் பரவலாக மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சாரல் மழையால், நாமக்கல் நகரில் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவி வருகிறது.

    வியாபாரிகள் பாதிப்பு

    பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, ஓலப்பாளையம், மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், இருக்கூர், பெரியசோளிபாளையம், தி.கவுண்டம்பாளையம், திடுமல், சிறு நல்லிகோவில், கொத்தமங்கலம், குரும்பல மகாதேவி, ஜமீன்எளம்பள்ளி, சோழசிராமணி, சுள்ளிப்பா ளையம், பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், கந்தம்பாளையம், மணியனூர், நல்லூர், கூடச்சேரி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பகல் 12 மணி முதல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

    பின்னர் வேகமாக பெய்ய தொடங்கிய மழை, விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக சாலைகளில்

    வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலை யோரம் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகார கடைகள், டிபன் கடைகள், பூக்கடைகள், ஜவுளிக்கடைகள், மண்பாண்டம் கடைகள், தள்ளுவண்டி கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். திடீரென மழை பெய்ததால், இருசக்கர வாகனங்கள், நடந்து செல்வோர் நனைந்தபடியே சென்றனர். 

    ×